Thursday, December 20, 2007
அத்தியாயம் -1 அன்னையும் பிதாவும்
என் இதயம் மிக சிறியது. சிலர் சொல்வார்கள் என் மனம் கல்லையும் மலையையும் போன்றது என்று. பொய். சுத்த பொய். அது ஒரு நரம்பு. மூளையில் கண்ணுக்கு தெரியாத எத்தனையோ அணுக்களின் கூட்டமைப்பு. ஆனால் அது வடிவமைக்கும் உலகம், அதன் கற்பனை சக்தி கணக்கில் அடங்கா. அப்படி எனக்குள்ளும் ஒரு உலகத்தை நான் வடிவமைக்க காரணமான என் அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வங்களே. என் அன்னை ஒரு போராளி. உலகத்தில் தன் குழந்தையை பெற்று வளர்க்கும் ஒவ்வோர் பெண்ணும் போராளியே. என்னையும் என் அக்கா தங்கை தம்பி தங்கையை வளர்க்க அவர்கள் பட்ட பாடு...அப்பப்பா... இன்றும் எங்களை பற்றி யோசிக்கிறார். என்னை எத்தனையோ பேர் சொல்கிறார்கள் நான் பொறுப்பானவன் என்று. உண்மை அதுவல்ல. என் அன்னை அப்படி எல்லோரும் சொல்லும்படி என்னை மாற்றியிருக்கிறாள். என் தந்தை... இன்று என்னோடு இல்லை ஆயினும் பல விஷயங்கள் நடக்கையில் அவர் என்னுடன் இருப்பதாகவே உணர்கிறேன். என்னையும் மீறி சில விஷயங்கள் நான் செய்கிறேன் என்றால் நான் அவர் ஆசிர்வாதங்களை வரமாய் பெற்றிருக்கிறேன் என்று நம்ப முடிகிறது. அப்படி ஒரு ரசிகரை, எல்லாவற்றையும் ரசிக்கும் ரசிகரை நான் இதுவரை கண்டதில்லை. என் தந்தையின் மேல் உள்ள பாசத்தை சுருக்கமாக சொல்ல வேண்டுமெனின்... ம்ம்ம்ம்... ஒரு விளம்பரம் பார்த்திருப்பீர்கள்...Gold winner Sunflower oil.. My Daddy Strongest... இதை கேட்க என்தந்தை இல்லை என்றாலும் இதை சொல்ல இன்னும் நான் இருக்கிறேன் என்பதில் சற்று ஆறுதல் தான். இந்த வலை பூவையும், இனி தொடுக்கும் பல பூக்களையும் என் அன்னைக்கும் பிதாவிற்கும் சமர்ப்பணம் செய்கிறேன். முடிக்கும் முன்....அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு.
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
Dear friend.,
First of all My heartly wishes for this blog. I haven't come across any books or passages like this yet.. Because I don't have reading habit.. :( But after reading this I feel that i'm missing something in life. This is a new experience for me. While reading ur blog it makes to imagine the situations and I can able to visuvalise those. I think ur words has that much power dear.. Great..!!
Keep it up..
- sl
Post a Comment