உன்னை நிஜமாய் நான் காதல் செய்தேனா?உன்னை பார்த்த அன்று ... நீ பேசிய அன்று என்ன தோன்றிவிட்டது எனக்கு உன்னை காதல் செய்ய? அப்படி ஒன்றும் பேசிவிடவில்லை நீ! உன் அறிவின் விஸ்தீரணமோ.. உன் அழகின் பிரதிபலிப்போ ஒன்றும் செய்துவிடவில்லை என்னை. உன்னை பார்த்து என்னுள் மின்சாரம் பாயவில்லை! என்றோ ஒருநாள் யோசித்து உன்னை காதல் செய்ய முடிவு செய்ய வைத்தது எது? அதை உன்னிடம் சொல்ல வைத்தது எது? துருவித்துருவி கேட்டாயே... ஒரு முட்டாள்த்தனமான கேள்விகளோடு அது கொடுத்த தைரியமா? தோழிதானே என்கிற சுதந்திரமா? ஏன் சொன்னேன் அன்று? ஒவ்வொரு நாளும் என்னை தீண்டாமல் சீண்டினாயே... உன்னை அனுமதித்தது எது? ஆண் எனும் என் மடத்தனமா? இல்லை பெண் எனும் உன் புத்திசாலித்தனமா? "தினமும் என்னை கவனி" என என்னை சுற்றி வரச்செய்தது எது? .......
உன்னை நிஜமாய் நான் காதல் செய்தேனா?
எங்கோ தொலைவில் இருந்தும் உன்னையே நினைக்க வைத்து எது? நீ வேண்டாமென்று தூக்கிபோட்ட காகிதமாய் என்னை நானே தேட செய்தது எது? நான் உன் நினைவிலும் நீ என் நினைவிலும் மெல்ல மெல்ல மறக்க செய்வது எது? உன்னை என்னிடமும் என்னை உன்னிடமும் கெட்ட கனவின் நினைவாய் ஒதுக்க வைப்பது எது?
இவை எவற்றுக்கும் என்னிடம் இல்லையம்மா பதில்.. உன்னிடமும் நிச்சயம் இருக்காது! ஆயினும் கேட்க வேண்டிய கேள்விகள் மட்டும் குறைவதே இல்லை இந்த ஆணிடம்.. ஏனெனில் முடிவெடுப்பதில் இன்னமும் தெளிவில்லை இந்த பெண்ணிடம்! உன்னை குறை சொல்லமாட்டேன்.. 19 நூற்றாண்டுகள் உன்னை அடக்கிய சமுகம் அல்லவா இதன் பொறுப்பு. நீ அல்ல...ஒரு சூறாவளியை எதிர்க்க இன்னொரு சூறாவளி உண்டாகும்போது இவையெல்லாம் சாதாரணம் தான்.. என்வலியும் உன் வழியும் ஏற்ககூடியதுதான். ஆயினும் சீக்கிரம் முடிய வேண்டும் இந்த கடும்போர் ஏனெனில் நீயும் நானும் ஒரு புதிய மழையில் நனையவேண்டிய தருணம் நெருங்குகிறது.. அங்கே என் பாரதியின் வரிகள் நிச்சயம் ஒலிக்கும் இந்த "ஆணுக்கு பெண் இளைப்பில்லை" என்று.. அன்று என் வலி மறந்திருக்கும் உன் வழி இணைந்திருக்கும்!
பின் குறிப்பு:- என்னமோ எழுத தோன்றியது இதை எழுதினேன்.. சாதாரணனின் சிந்தனை தாறுமாறாய் இருக்கும். திட்டாதீங்க வாசகர்களே!!!!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment